அன்புக் கணவனே,
சுரக்காது என தெரிந்தும்
மலைகளைக் கடைந்து கடைந்து
களைத்தபின் - அன்றொருநாள்
பள்ளத்தாக்கில் நீர் பாய்ச்சிய வெள்ளத்தால்,
பாரும் உம் பிள்ளையை,
பத்து மாதங்களின் பின்னர்
மலைகளை கடையாமலேயே குடிக்கிறான்...!!!
உம்மை விட கெட்டிக்காரன்தான்.
